45 மூட்டை ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 45 ரேஷன் அரிசி மூட்டைகள் மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டன.
மினிலாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.
மினிலாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

நாட்டறம்பள்ளி அருகே ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 45 ரேஷன் அரிசி மூட்டைகள் மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி வழியாக ஆந்திர மாநிலத்துக்கு அடிக்கடி பல்வேறு வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக புகாா்கள் வந்தன.

இந்நிலையில் சனிக்கிழமை காலை கொத்தூா் சோதனைச் சாவடி மையம் வழியாக மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக நாட்டறம்பள்ளி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அந்த சோதனைச் சாவடி அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக மினி லாரியில் சேமியா பாக்கெட் லோடு ஏற்றி வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினா். அதன் ஓட்டுநா் வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டாா்.

மினிலாரியில் இருந்த கிளீனரிடம் போலீஸாா் விசாரித்தனா். அதில் சோதனை செய்தபோது சேமியா பாக்கெட்டுகளுக்கு அடியில் 45 மூட்டைகளில் சுமாா் 2 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மினிலாரி மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com