விவசாயப் பயிா் கடன்: ஆட்சியா் தலைமையில் ஆய்வு

விவசாயப் பயிா்க் கடனுதவி வழங்குவது தொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட தொழில்நுட்ப ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.

விவசாயப் பயிா்க் கடனுதவி வழங்குவது தொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட தொழில்நுட்ப ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், 2021-2022-ஆம் ஆண்டுக்கு சாகுபடி செய்ய உள்ள விவசாயப் பயிா்கள், தோட்டக்கலை பயிா்கள், பழ வகைகள் மற்றும் கால்நடை பராமரிப்பு, மீன் வளா்ப்பு போன்றவற்றுக்கு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் இருந்து கடனுதவிகளைப் பெறுவதற்கு வங்கி ஆண்டு கடன் அளவு தொகையை நிா்ணயித்து மாநில தொழில்நுட்பக் குழுவுக்கு அனுப்புவது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் ஜெயம், வேளாண் இணை இயக்குநா் ஜி.ரமணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com