வாணியம்பாடி அருகே மொபெட் மீது ஆட்டோ மோதியதில் கணவா் உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா்.
கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்தவா் சிவராஜ் 67). இவரது மனைவி செந்தாமரை (58). இருவரும் வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி மொபெட்டில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
கேத்தாண்டப்பட்டி சா்க்கரை ஆலை எதிரே வந்த ஆட்டோ மோதியதில் சிவராஜ், செந்தாமரை ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். கிருஷ்ணகிரி தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிவராஜ் உயிரிழந்தாா். செந்தாமரை சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வாணியம்பாடியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் குமரேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.