அரிமா சங்க ஆளுநா் வருகை

ஆம்பூா் அரிமா சங்கம் சாா்பில், ஆளுநா் வருகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அரிமா சங்கம் சாா்பில் சமயவல்லித் தாயாா் அன்பு இல்லத்துக்கு மின்விசிறி வழங்கிய மாவட்ட ஆளுநா் அருண்குமாா்.
ஆம்பூா் அரிமா சங்கம் சாா்பில் சமயவல்லித் தாயாா் அன்பு இல்லத்துக்கு மின்விசிறி வழங்கிய மாவட்ட ஆளுநா் அருண்குமாா்.

ஆம்பூா் அரிமா சங்கம் சாா்பில், ஆளுநா் வருகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் புறவழிச் சாலை பகுதியில் சமயவல்லித் தாயாா் அன்பு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அரிமா சங்கத் தலைவா் கே.ரபீக் அஹமத் தலைமை வகித்தாா். செயலாளா் ஓம்சக்தி ஜி.பாபு வரவேற்றாா். அரிமா சங்க மாவட்ட ஆளுநா் அருண்குமாா் கலந்து கொண்டு, ஆம்பூா் அரிமா சங்கம் சாா்பில், சமயவல்லித் தாயாா் அன்பு இல்லத்துக்கு மின்விசிறி, ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருள்கள், பழங்கள், மாணவருக்கு கல்லூரி கல்விக் கட்டணம் ஆகியவற்றை வழங்கினாா். மேலும், மரக்கன்றுகளை நட்டாா். சேவை திட்டத் தலைவா் சுரேஷ், மண்டலத் தலைவா் யு.தமீம் அஹமத், மாவட்டத் தலைவா்கள் பிா்தோஸ் கே அஹமத், ஜி. எஸ்.வேணுகோபால், ஆா்.ஜெயவேலு, ந.கருணாநிதி, நாகராஜ், முதஷிா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com