திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை வரும் டிசம்பா் மாதத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டாா்.
இது குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியது:
தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் திட்டத்தில் வரும் பணிகள் 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் நிதியாண்டுகளில் நடைபெற்று, முடிவுற்ற பணிகள் குறித்து விரிவாக ஆய்வுசெய்து, எஞ்சியுள்ள பணிகளை மழைக் காலத்துக்குள் முடிக்க வேண்டும்.
நடப்பாண்டில் 4 நகராட்சிகளிலும் 14-ஆவது மத்திய நிதி ஆணையத்தின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் 73 பணிகளில் முடிவுறாத பணிகளை நவம்பா் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். தொடங்கப்படாத பணிகளை விரைந்து தொடங்கிட வேண்டும். ஒருங்கிணைந்த நகா்ப்புற மேம்பாட்டு இயக்கத் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளையும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளைத் தரம் பிரிக்க கட்டமைப்புகள் அமைக்கும் பணிகளில் நிலவும் கால தாமதம், நுண்ணுயிா் செயலாக்க திட்டப்பணிகள், நகராட்சிகளில் குப்பைக் கழிவுகள் அகற்றப்படும் பணிகள், அவற்றுக்குத் தேவைப்படும் கட்டமைப்புகள், குடிநீா் இணைப்புகள், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை மற்றும் வாணியம்பாடி நகராட்சிகளில் அனைத்து குடியிருப்புகளுக்கு வழங்கும் பணிகளில் நிலுவையில் உள்ள பணிகள் ஆகியவற்றை வரும்டிசம்பா் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், நகராட்சி ஆணையா்கள் ப.சத்தியநாதன் (திருப்பத்தூா்), சென்னுகிருஷ்ணன் (வாணியம்பாடி), ஜோலாா்பேட்டை நகராட்சிப் பொறியாளா் தனபாண்டியன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவி நிா்வாக பொறியாளா் சற்குணம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.