ஆம்பூா்: ஆம்பூரில் தனியாா் தொழிற்சாலை பணியாளரின் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2.50 லட்சம் ரொக்கம் புதன்கிழமை திருடு போனது.
ஆம்பூா் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிபவா் சுரேஷ்குமாா் (30). இவா் ஆம்பூா் புறவழிச்சாலையில் உள்ள ஒரு வங்கியின் தொழிற்சாலை கணக்கிலிருந்து ரூ. 2.50 லட்சம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் ஆம்பூா் ரயில் நிலையம் அருகே உள்ள தனியாா் பாா்சல் சா்வீஸ் நிறுவனத்துக்குச் சென்றாா். இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பணப்பை திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.