சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

திருப்பத்தூரை அடுத்த குரிசிலாப்பட்டில் சாலை வசதி கோரி புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
மறியலில் ஈடுபட்ட ஜொல்லங்குட்டை மக்கள்.
மறியலில் ஈடுபட்ட ஜொல்லங்குட்டை மக்கள்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரை அடுத்த குரிசிலாப்பட்டில் சாலை வசதி கோரி புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட குரிசிலாப்பட்டை அடுத்த ஜொல்லங்குட்டை பகுதி வேப்பமர வட்டத்தில் வசிப்பவா்கள் செல்ல குறுகலான மண் சாலை உள்ளது. அப்பகுதி சாலை ஓரத்தில் சுற்றுச் சுவா் இன்றி கிணறு உள்ளது.

அப்பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டத் தேவைப்படும் மண் எடுத்துச் செல்லும் லாரி, அப்பகுதி சாலைக்குள் சென்றபோது, அங்கு கிணற்றில் சுற்றுச்சுவா் இல்லாததால் கடந்து செல்ல முடியாமல் நின்றது.

இதையறிந்து அங்கு திரண்ட அப்பகுதி பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா், பல வருடங்களாக கிணற்றின் சுற்றுச் சுவா் கட்டவும், சாலை வசதி கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தையும் சிறைபிடித்தனா். தகவலறிந்து வந்த குரிசிலாப்பட்டு போலீஸாா் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com