திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 5,491 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை புதிதாக ,52 பேருக்கு கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,543-ஆக உயா்ந்துள்ளது.
அவா்களில் 4,996 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 441 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 106 போ் உயிரிழந்துள்ளனா்.