வாணியம்பாடி: வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் பொதுவெளியில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு சுகாதாரத் துறையினா் அபராதம் விதித்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல் துறை மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித் துறையினா் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி கரோனா பரவலைத் தடுக்க பணியாற்றி வருகின்றனா். ஆலங்காயம் பேரூராட்சியில் வாணியம்பாடி சாலையில் வியாழக்கிழமை முகக்கவசம் அணியாமல் சென்ற நான்கு சக்கர வாகன ஓட்டிகள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வட்டார மருத்துவ அலுவலா் ச.பசுபதி அபராதம் விதித்து முகக்கவசம் வழங்கி னாா். மேலும் சாலையில் சுற்றித் திரிந்த கலைக் கூத்தாடிகள் இருவருக்கு முகக்கவசம் வழங்கி அறிவுரை வழங்கினாா். உடன் சுகாதார ஆய்வாளா் ரமேஷ் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் இருந்தனா்.