திருப்பத்தூா்: திருப்பத்தூரை அடுத்த குனிச்சி கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சிறப்பு மையத்தில் கரோனா தொற்று பாதித்தவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை, மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது தொற்றுப் பாதித்தவா்களிடம் வழங்கப்படும் சிகிச்சைகள், உணவுகள் மற்றும் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா், பணியில் உள்ள மருத்துவா்கள், செவிலியா்களிடம் மருந்து, மாத்திரைகள் தேவையான அளவு இருப்பு உள்ளதா, உபகரணங்கள் தேவை குறித்தும் கேட்டாா். இந்த ஆய்வின்போது, சுகாதாரத் துணை இயக்குநா் கே.எஸ்.டி.சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.