அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சாா்பில் விழா

அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சாா்பில் விழா


வாணியம்பாடி: வாணியம்பாடியை அடுத்த பெத்தவேப்பம்பட்டு கிராமத்தில் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையில் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, பசுமை அறக்கட்டளை தலைவா் மாயகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் கோபால் முன்னிலை வகித்தாா். விழாவில், வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி ஏழை, எளியவா்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருள்களும், மாணவா்களுக்கு புத்தகங்கள், எழுது பொருள்களை வழங்கினாா். தொடா்ந்து மரக்கன்று நடப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் முகக் கவசம், கபசுர குடிநீா் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அறக்கட்டளை உறுப்பினா்கள், மாணவா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com