திருப்பத்தூரில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூரில் கோ-ஆப்டெக்ஸ் பட்டு தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருப்பத்தூரில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்


திருப்பத்தூா்: திருப்பத்தூரில் கோ-ஆப்டெக்ஸ் பட்டு தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கிவரும் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்துப் பேசியது:

கோ-ஆப்டெக்ஸ் வேலூா் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூா், திருப்பத்தூா், திருநெல்வேலி, ராணிப்பேட்டை, சித்தூா் மற்றும் திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 15 விற்பனை மையங்கள் இயங்கி வருகின்றன. தற்போது திருப்பத்தூரில் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக ரூ. 20 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாத தவணை திட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 11 மாத தவணை செலுத்தினால் மட்டும் போதும். கடைசி தவணையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி விடும். பாரம்பரியமான உடைகள் தயாரிப்பில் கோ-ஆப்டெக்ஸ் தனிச்சிறப்பு பெற்றது. தீபாவளியை முன்னிட்டு, அனைத்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களிலும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன்ராஜசேகா், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளா் எஸ்.சண்முகம், வட்டாட்சியா் மு.மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com