அணைக்கட்டு ஒன்றியம், அகரம் ஊராட்சி எல்லப்பன்பட்டி கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக் கடை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
வேலூா் ஆவின் தலைவரும், வேலூா் புகா் மாவட்ட அதிமுக செயலாளருமான த. வேலழகன் கலந்து கொண்டு நடமாடும் நியாயவிலைக் கடையைத் தொடங்கி வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா். வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி. ராமு, அணைக்கட்டு ஒன்றிய செயலாளா் கே. ஆனந்தன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சி. அன்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.