வாணியம்பாடி: ஊரக வளா்ச்சித் துறையில் 20 ஆண்டுகளாக விபத்து ஏற்படுத்தாமல் வாகனம் ஓட்டிய அரசு ஓட்டுநருக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் விருது வழங்கினாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஊரக வளா்ச்சி துறையில் விபத்தின்றி வாகனம் ஓட்டிய நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலக ஓட்டுநா் முரளிக்கு 4 கிராம் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வியாழக்கிழமை வழங்கி பாராட்டினாா்.
நாட்டறம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் ரகுகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.