ஆம்பூரை தனி தொகுதியாக்கக் கோரிக்கை

ஆம்பூரை தனித் தொகுதியாக அறிவிக்க தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் மன்றம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆம்பூரை தனித் தொகுதியாக அறிவிக்க தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் மன்றம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மாநிலப் பொதுச் செயலாளா் நேய.சுந்தா் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம. ப. சிவன்அருளை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டப் பேரவை தொகுதிகள் குறித்த பட்டியலை தோ்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது.

அதில், திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆம்பூா், வாணியம்பாடி, திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை ஆகிய தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் ஒன்றுகூட தனித் தொகுதியாக இல்லை. திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் தொகுதியில் பட்டியலின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாக உள்ளது. எனவே, ஆம்பூரை தனித் தொகுதியாக அறிவிக்க தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com