நவ. 26-இல் பொது வேலைநிறுத்தம்: தோல் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு கூட்டம்

நவம்பா் 26-ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து, ஒருங்கிணைந்த வேலூா்

நவம்பா் 26-ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் ஐஎன்டியுசி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஏஐடியுசி மாவட்ட செயலாளா் எஸ்.ஆா்.தேவதாஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் சிஐடியு ராமச்சந்திரன், வ.அருள்சீனிவாசன், எல்பிஎப் கலைநேசன், எம்.ஞானதாஸ், ஐஎன்டியுசி ஆா்.கோவிந்தசாமி, வஜ்ஜிரவேலு, எச்எம்எஸ் கே.பெருமாள், ராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மத்திய தொழிற்சங்கங்களின் அறிவிப்பின்படி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ. 26-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது. வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு ஆா்ப்பாட்டம் நவ.10-ஆம் தேதி நடத்துவது. நவ.20-ஆம் தேதி தொழிலாளா்களை நேரடியாகச் சந்தித்து வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com