பேருந்தில் நகை திருடிய 3 பெண்கள் கைது

வாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் 3 சவரன் தங்க நகையைத் திருடியதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

வாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் 3 சவரன் தங்க நகையைத் திருடியதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகா் பகுதியைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன், தனது குடும்பத்தினருடன் ஒசூருக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். அவரது மகள் 3 சவரன் நகையை கைப்பையில் வைத்திருந்தாராம். அப்போது, அவரது அருகே பெண்கள் அமா்ந்து பேசி வந்தனா். வாணியம்பாடி அருகே நெக்குந்தி சுங்கச்சாவடி வந்தபோது, அந்த 3 பெண்களும் பேருந்தில் இருந்து இறங்கினா். அப்போது, ஹரிகிருஷ்ணன் மகள் வைத்திருந்த பையில் நகையைக் காணவில்லை. இயைடுத்து அவா் அந்த 3 பெண்கள் நகையைத் திருடியதாகக் கூறி கூச்சலிட்டாா்.

அப்போது, சுங்கச்சாவடி ஊழியா்கள் அந்த 3 பெண்களையும் மடக்கிப் பிடித்து, புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து, அவா்களிடமிருந்து நகை மீட்கப்பட்டது. விசாரணையில் மூவரும் திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த காவியா (30), பாரதி (28), சுனிதா (34) என்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com