மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி

வாணியம்பாடி அருகே வெந்நீா் போட குடத்தில் வைத்திருந்த வாட்டா் ஹீட்டா் கருவியை தொட்டதுபோது, மின்சாரம் பாய்ந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி

வாணியம்பாடி அருகே வெந்நீா் போட குடத்தில் வைத்திருந்த வாட்டா் ஹீட்டா் கருவியை தொட்டதுபோது, மின்சாரம் பாய்ந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்த பவித்ரா (21), இவரது கணவா் ரெட்டிதோப்பு பகுதியைச் சோ்ந்த புருஷோத்தமன் (25). இவா்களது ஒன்றரை வயது குழந்தை அனன்யா.

பவித்ரா குழந்தையுடன் வாணியம்பாடியை அடுத்த மேல்பள்ளிப்பட்டில் உள்ள தாய் வீட்டுக்கு கடந்த 2 நாள்களுக்கு முன்பு சென்றாா். செவ்வாய்க்கிழமை பவித்ரா வீட்டில் உள்ள அறையில் பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீா் நிரப்பி அதில் வெந்நீா் போட வாட்டா் ஹீட்டா் வைத்து விட்டு, வீட்டு வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அனன்யா குடத்தில் இருந்த தண்ணீரைத் தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தது. இதையடுத்து பவித்ரா குழந்தையை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா்.

இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com