ஆம்பூா்: தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஆம்பூா் கிளை பணியாளருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து வங்கிக் கிளை வியாழக்கிழமை மூடப்பட்டு, இரு நாள்களுக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு இரு நாள்களுக்குப் பிறகு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.