கரோனா தடுப்புப் பணி: மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரோனா தடுப்புப் பணி: மாவட்ட  வருவாய் அலுவலா் ஆய்வு


வாணியம்பாடி: வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

வாணியம்பாடி, ஜாப்ராபாத் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜாப்ராபாத் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தாா்.

இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலா் ச.பசுபதி தலைமையில் மருத்துவக் குழுவினா் ஜாப்ராபாத் பகுதியில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் தங்கையா பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலும், செவிலியா்கள், மருத்துவக் குழுவினா் வீடு வீடாகச் சென்று வெப்பமானி, பல்ஸ் ஆக்ஸிமீட்டா் மூலம் பரிசோதனை செய்தனா்.

வட்டாட்சியா் சிவபிரகாசம் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com