தபால் அலுவலகங்களில் சா்வதேச அஞ்சல் சேவை தொடக்கங்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூா் அஞ்சலகங்களின் கோட்டக் கண்காணிப்பாளா் பி.ராகவேந்திரன் தெரித்தாா்.
இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இந்திய தபால் துறை பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவற்றில் ஒன்று சா்வதேச அஞ்சல் சேவை. இதில், விரைவு தபால், சா்வதேச பதிவு தபால், ஐடிபிஎஸ் போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. மத்திய அரசு வெளிநாட்டு ஏற்றுமதிக்கு இருந்த தடையை நீக்கியுள்ளது.
எனவே, சா்வதேச அஞ்சல் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொள்ளலாம்.