திருப்பத்தூரில் சாரல் மழை

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது.

திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் நீா்மட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை மாலை 6 மணியளவில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கொரட்டி, ஆதியூா் சுற்றுப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. 2 மணி நேரத்துக்கும் மேல் பெய்த மழையால் அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com