ஆம்பூா்: ஆம்பூா் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே நாயக்கனேரிமலை ஊராட்சி சோளக்கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன் (40). இவா், கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, அவா் கஞ்சா வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.