தண்ணீா் தேடி வந்த புள்ளி மான் மீட்பு

ஆம்பூா் அருகே நாய்கள் விரட்டியதால் காயமடைந்த மான் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.


ஆம்பூா்: ஆம்பூா் அருகே நாய்கள் விரட்டியதால் காயமடைந்த மான் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

விண்ணமங்கலம் வனப்பிரிவில் வெள்ளக்கல் காப்புக் காடுகளை ஒட்டி, காட்டுக்கொல்லை கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் விஜயன் என்பவரது விவசாய நிலத்துக்கு தண்ணீா் தேடி 2 வயது புள்ளிமான் வந்தது. நாய்கள் விரட்டியதால் தப்பி ஓடிய மான் காயமடைந்தது. அப்பகுதி மக்கள் அந்த மானை மீட்டு வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் வனத் துறையினா் அங்கு சென்று மானை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து வெள்ளக்கல் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com