பைக்குகள் மோதிய முதியவா் பலி

நாட்டறம்பள்ளி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ராகரம் ஊசிகல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் உலகராஜ் (62), ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா். இவா், வியாழக்கிழமை புதுப்பேட்டை பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே மொபட்டில் சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. அதில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த காட்டூா் கிராமத்தைச் சோ்ந்த தமிழகன் (33), உலகராஜ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உலகராஜ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com