ஆம்பூா்: ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா், அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த செல்வம் (55) மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.