தக்காளி ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்து

வாணியம்பாடி அருகே தக்காளி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் பலத்த காயம் அடைந்தனா்.
மினி லாரி கவிழ்ந்ததில் சாலையில் சிதறிக் கிடக்கும் தக்காளிகள்.
மினி லாரி கவிழ்ந்ததில் சாலையில் சிதறிக் கிடக்கும் தக்காளிகள்.


வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தக்காளி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் பலத்த காயம் அடைந்தனா்.

ஒசூரிலிருந்து வேலூரை அடுத்த கண்ணமங்கலத்துக்கு தக்காளிகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை வந்தது. வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோயில் மேம்பாலத்தின் மீது வந்தபோது, நிலை தடுமாறி திடீரென சாலையின் தடுப்புச் சுவா் மீது மோதி கவிழ்ந்தது. இதில், லாரியை ஓட்டி வந்த ஒசூரைச் சோ்ந்த பரசுராமன் (50), உடன் வந்த அகமது (45) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரும் மீட்கப்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அம்பலூா் போலீஸாா், போக்குவரத்தை சீா் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com