வெந்நீரில் தவறி விழுந்த குழந்தை பலி

ஜோலாா்பேட்டை அருகே வெந்நீரில் தவறி விழுந்த 4 வயது குழந்தை உயிரிழந்தாா்.

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே வெந்நீரில் தவறி விழுந்த 4 வயது குழந்தை உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த சின்ன மூக்கனூா் ராமசாமி வட்டத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சத்தியமூா்த்தி. இவருக்கு ஸ்ரீநிகா என்ற 4 வயது குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி வீட்டின் அருகே குளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வெந்நீா் பாத்திரத்தில் ஸ்ரீநிகா தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஸ்ரீநிகா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com