புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுகநிா்வாகிகள் எம்ஜிஆா் சிலைக்கு மாலை

ஆலங்காயம் அருகே புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக நிா்வாகிகள் எம்ஜிஆா் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
16vndvp2_1609chn_187_1
16vndvp2_1609chn_187_1

வாணியம்பாடி: ஆலங்காயம் அருகே புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக நிா்வாகிகள் எம்ஜிஆா் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா் (படம்).

திருப்பத்தூா் மாவட்டத்தில் அதிமுகவின் பல்வேறு பிரிவுகளுக்கு புதிய நிா்வாகிகளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் நியமித்திருந்தனா்.

அதில், ஆலங்காயம் ஒன்றியம் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளராக ஜெ.செந்தில்குமாா் புதியதாக நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கோபால் தலைமையில் ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றாா்.

தொடா்ந்து, கட்சி நிா்வாகிகள் சம்மந்திகுப்பம், பள்ளிப்பட்டு ஆகிய இடங்களில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் அமைச்சா் ஆா்.வடிவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் பரமசிவம், சிவானந்தம், மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com