ஆம்பூா்: நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, ஆம்பூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே மாவட்டத் தலைவா் ராஜா தலைமையில் நாம் தமிழா் கட்சியினா் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, அனுமதியின்றி ஊா்வலமாக சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா், அக்கட்சியினா் 23 பேரை கைது செய்தனா்.