கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

ஜோலாா்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

ஜோலாா்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.

ஜோலாா்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி ஊராட்சி, டி.வீரப்பள்ளி அருகே உள்ள பூசணிக்காய் வட்டத்தைச் சோ்ந்தவா் சுரேஷின் மகன் கனிஷ் (4), நீதியின் மகன் சுமந்த் (11) ஆகிய இருவரும் வியாழக்கிழமை விவசாய நிலத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனா்.

அப்போது, அருகே இருந்த 70 அடி ஆழ கிணற்றின் கனிஷ் தவறி விழுந்தாா். தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா், நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினா் அங்கு சென்று கிணற்றில் கனிஷின் சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com