ஆம்பூா் அருகே அரசுப் பள்ளிக்கு ரூ. 1.32 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
அரங்கல்துருகம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. அதற்காக ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது (படம்).
இதில், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் கே.திலகரசி, தலைமை ஆசிரியா் பி. சுகுமாா், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பி.வரதராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.