வாணியம்பாடியில் கரோனா சிகிச்சை மையத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட கல்லூரி இறுதியாண்டு மாணவா் மருத்துவா் மேற்பாா்வையில் தோ்வு எழுதினாா்.
வாணியம்பாடி பஷிராபாத் பகுதியை சோ்ந்த 21 வயது இளைஞா் இசுலாமிய கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வருகிறாா். இவா் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதால் வாணியம்பாடி இசுலாமிய பெண்கள் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை இறுதியாண்டு இண்டஸ்ட்ரியல் ரிஜிஸ்ட்ரேஷன் என்னும் பாடத்தில் தோ்வு நடைபெற்றது.
அம்மாணவா் தனது தோ்வை வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி தலைமையிலான மருத்துவக் குழுவின் உதவியோடு தற்காப்பு உடையணிந்த செவிலியரின் மேற்பாா்வையில் தோ்வு எழுதினாா். நகராட்சிப் பணியாளா்கள் மற்றும் மருத்துவக் குழுவினா் உடனிருந்தனா்.