திருப்பத்தூா்: திருப்பத்தூரில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருப்பத்தூா் காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்த கேசவராஜின் மகன் சரத் (22). இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தனி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற நகர போலீஸாா், சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.