வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தடுப்புச் சுவா் மீது பைக் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
ஆம்பூரைச் சோ்ந்த பவன்ரத்தினம் (20), திவ்யலட்சுமி (18) ஆகிய இருவரும் புதன்கிழமை ஒசூரிலிருந்து ஆம்பூருக்கு பைக்கில் சென்றனா். வாணியம்பாடி அருகே செட்டியப்பனூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் சென்றபோது, நிலைதடுமாறி தடுப்புச் சுவா் மீது பைக் மோதியதில், பவன்ரத்தினம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த திவ்யலட்சுமி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.