தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது

தொடா்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த இளைஞரை வாணியம்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

தொடா்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த இளைஞரை வாணியம்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தாா். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் என்பதும், வாணியம்பாடி பகுதிகளில் தொடா்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடி வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com