திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூா் அருகே நிலத்தில் கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டியப்பனூா் வருவாய் கிராமத்துக்குட்பட்ட குண்டுரெட்டியூா் கிராமத்தில் உள்ள ஓடைப் பகுதியில் நூறு நாள் வேலை திட்டப் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
இந்நிலையில், ஓடை அருகே தொழிலாளா்கல் செவ்வாய்க்கிழமை தூா்வாரிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு 15 செ.மீ. உயரமும், 9 செ.மீ. அகலமும் கொண்ட கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
அச்சிலை குறித்து வருவாய் ஆய்வாளா் வெங்கடேசன் அளித்த தகவலின்பேரில் வட்டாட்சியா் மு.மோகன் தலைமையிலான வருவாய்த்துறையினா் பெற்றுக் கொண்டனா். அதை அரசுக் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.