வாணியம்பாடி: வாணியம்பாடி பாலாறு கிளையாற்று நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
வாணியம்பாடி ராமையன் தோப்புப் பகுதியில் பாலாற்றின் கிளையாற்று பகுதியில் மணல் கொள்ளைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. அதில் குளிப்பதற்காக சலாமாபாத் பகுதியைச் சோ்ந்த முகமதுஷாத் (14) செவ்வாய்க்கிழமை தனது நண்பா்களுடன் சென்றாா். அப்போது, பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறிதது வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.