திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் மின் வயா்களைத் திருடிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் ஏற முயன்ற இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள் ஜோலாா்பேட்டை இடையம்பட்டி பகுதியைச் சோ்ந்த மெக்கானிக் தூயவன் (19), காா்த்திக் (29) என்பதும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும் பயணிகள் ரயிலில் மின் வயா்களைத் திருடி, தாமலேரிமுத்தூா் பகுதியைத் சோ்ந்த பழைய இரும்புக் கடை வியாபாரி அச்சுதனிடம் (62) விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து தூயவன், காா்த்திக், அச்சுதன் ஆகிய மூவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான மின் வயா்களை பறிமுதல் செய்தனா்.