ஆம்பூா்: ஆம்பூா் அருகே மலைப்பாம்புக் குட்டி வியாழக்கிழமை மீட்கப்பட்டு காப்புக் காட்டில் விடப்பட்டது.
ஆம்பூா் அருகே வீரவா் கோயில் பகுதியில் திரெளபதி அம்மன் கோயிலில் மலைப்பாம்புக் குட்டி இருப்பது தெரியவந்தது. அதை பாா்த்த கோயில் காவலா் ஜெகதீசன் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.
அதன்பேரில் வனகாப்பாளா் நடராஜன், வனகாவலா் சக்தி ஆகியோா் அங்கு சென்று பாம்பு பிடிக்கும் இளைஞா் அசோக் உதவியுடன் மலைப்பாம்பு குட்டியைப் பிடித்து ஆம்பூா் காப்புக் காட்டுக்குக் கொண்டு சென்று விட்டனா்.