திருப்பத்தூா் பகுதியில் கரோனா தடுப்பு விதிகளை மீறியவா்களிடம் ரூ. 1.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் ப.சத்தியநாதன் கூறியது:
திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில், ஆகஸ்ட் மாதம் சாா்-ஆட்சியா் (பொறுப்பு) ஏ.அப்துல்முனீா் தலைமையில் 3 துணை ஆட்சியா்கள், நகராட்சி ஆணையா் மேற்பாா்வையில், தனியாள் நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முகக்கசவம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக வியாழக்கிழமை வரை ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தொடா்ந்து, விதிகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.