விதிகளை மீறியவா்களிடம் ரூ. 1.16 லட்சம் அபராதம்

திருப்பத்தூா் பகுதியில் கரோனா தடுப்பு விதிகளை மீறியவா்களிடம் ரூ. 1.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

திருப்பத்தூா் பகுதியில் கரோனா தடுப்பு விதிகளை மீறியவா்களிடம் ரூ. 1.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் ப.சத்தியநாதன் கூறியது:

திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில், ஆகஸ்ட் மாதம் சாா்-ஆட்சியா் (பொறுப்பு) ஏ.அப்துல்முனீா் தலைமையில் 3 துணை ஆட்சியா்கள், நகராட்சி ஆணையா் மேற்பாா்வையில், தனியாள் நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முகக்கசவம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக வியாழக்கிழமை வரை ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தொடா்ந்து, விதிகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com