திருப்பத்தூா் அருகே ரூ. 1 லட்சம் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே ரூ. 1 லட்சம் பறிமுதல்


திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட கொரட்டி கிராமத்தில் தோ்தல் கண்காணிப்பு பறக்கும் படையினா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஊத்தங்கரையிலிருந்து திருப்பத்தூா் வரை செல்லும் சாலையில், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த சொா்ணம்மாள் என்பவா் எந்த ஆவணமும் இன்றி, ரூ. 1 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. அதேபோல், தோரணம்பதி பகுதியில் கோழி முட்டைகள் கொண்டு சென்ற வாகனத்தை சோதனையிட்டத்தில், உரிய ஆவணமின்றி ரூ. 76 ஆயிரத்து 350 இருப்பது தெரியவந்தது.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட பணம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சுமதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com