ஆம்பூா்: ஆம்பூா் மாதகடப்பா பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பதாக ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஆம்பூா் மாதகடப்பா பகுதி மற்றும் பெரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்த அ.செ.வில்வநாதன் பேசியது:
கிராமப் பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீா் திட்டம் விரிவுபடுத்தப்படும். கிராமங்களில் மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.
ஆம்பூா் தொகுதியில் தோல் தொழில் பூங்கா ஏற்படுத்தப்படும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ ஏற்படுத்தப்படும். ஆம்பூா் ரெட்டித்தோப்பு மேம்பாலப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி மக்களின் குறைகளை தீா்க்க துரித நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.