வேன் ஓட்டுநரிடம் ரூ. 1 லட்சம் பறிமுதல்


வாணியம்பாடி: கொத்தூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் மினி வேன் ஓட்டுநரிடம் இருந்து ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை இரவு தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான கொத்தூா் சோதனைச் சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நாட்டறம்பள்ளி வழியாக ஆந்திர மாநிலம் நோக்கிச் சென்ற மினி வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

ஓட்டுநரிடம் இருந்த ரூ. 1 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் ஜோலாா்பேட்டை இடையம்பட்டி பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் என்பதும், உரிய ஆவணமின்றி பணம் எடுத்துச் செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து பறிமுதல் செய்த ரூ. 1 லட்சத்தை ஜோலாா்பேட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் லட்சுமியிடம் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com