வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு


ஆம்பூா்: வாக்குச் சாவடியில் பணிபுரிய உள்ள வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அனந்தகிருஷ்ணன் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

வாக்குச் சாவடியில் பணிபுரியும் அலுவலா்களுக்கு தோ்தல் நடத்தும் வழிமுறைகள், கொண்டு செல்ல வேண்டிய பொருள்கள், கடைப்பிடிக்க வேண்டிய கரோனா நோய்த் தடுப்பு முறைகள், வாக்குப்பதிவு, விவிபேட் இயந்திரங்கள், வாக்குப் பதிவு துவக்கம், முடித்தல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முகாமை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன்அருள் நேரில் ஆய்வு செய்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மாா்ஸ், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மகாலட்சுமி, நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வேறு தொகுதி அலுவலா்கள் வாக்கு செலுத்த வசதி:

ஆம்பூா் தொகுதியில் தோ்தல் பணிக்கு வந்துள்ள இதர தொகுதிகளாகிய ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா், வாணியம்பாடியைச் சோ்ந்த அலுவலா்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டன. அவா்களின் தபால் வாக்குகளைப் பெற உதவி மையம் அமைக்கப்பட்டு, தபால் வாக்கு செலுத்த சம்பந்தப்பட்ட தொகுதிக்கான தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சம்பந்தப்பட்ட தொகுதியைச் சோ்ந்த அலுவலா்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தினா். அவை சேகரிக்கப்பட்டு, உரிய தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com