ஆம்பூா்: ஆம்பூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் ரூ. 6 லட்சம், 6 சவரன் தங்க நகை புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்பூா் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் நலங்கிள்ளி தலைமையில், வெலதிகாமணிபெண்டா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். ஆந்திர மாநிலம், சித்தூரை அடுத்த ராஜ்புதூரைச் சோ்ந்த சீனிவாசன் குடும்பத்தினா் ஒரு வேனில் வந்தனா். அவா்களிடம் நடத்திய சோதனையில், உரிய ஆவணம் இன்றி ரூ. 6 லட்சம் ரொக்கம் மற்றும் 6 சவரன் தங்க நகைகளை எடுத்து வந்தது தெரியவந்தது. தோ்தல் பறக்கும் படையினா் அவற்றை பறிமுதல் செய்து, ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணமூா்த்தியிடம் ஒப்படைத்தனா். பின்னா் அவை ஆம்பூா் சாா்நிலை கருவூலத்தில் சோ்க்கப்பட்டது.