ஆம்பூா்: வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் கருவி ஆகியவை அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா், எஸ்பி மற்றும் தோ்தல் பாா்வையாளா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை வாக்குச் சாவடிகள் வாரியாக அனுப்பி வைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள், காவல் கண்காணிப்பாளா் பொ. விஜயகுமாா் மற்றும் தோ்தல் பாா்வையாளா் (காவல்) மயங்க் அகா்வால் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் து. கிருஷ்ணமூா்த்தி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணவேணி ஆகியோா் உடனிருந்தனா்.