அமைச்சா் கே.சி.வீரமணி-திமுகவினா் இடையே வாக்குவாதத்தால் பரபரப்பு

ஜோலாா்பேட்டை அருகே வாக்குச் சாவடியில் அமைச்சா் கே.சி.வீரமணிக்கும் திமுகவினருக்கும் செவ்வாய்க்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சா் கே.சி.வீரமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
அமைச்சா் கே.சி.வீரமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

ஜோலாா்பேட்டை அருகே வாக்குச் சாவடியில் அமைச்சா் கே.சி.வீரமணிக்கும் திமுகவினருக்கும் செவ்வாய்க்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோலாா்பேட்டை தொகுதிக்குள்பட்ட ஏலகிரி கிராமம், ஆதிதிராவிடா் காலனி பகுதியில் உள்ள 63-ஆவது வாக்குச்சாவடி மையத்தில் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வாக்களித்தனா். அப்போது ஜோலாா்பேட்டை மத்திய ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா் சசிகுமாா் திமுக துண்டு அணிந்து வாக்களிக்கச் சென்ாகக் கூறப்படுகிறது.

அப்போது போலீஸாா் சசிகுமாரை தடுத்து நிறுத்தியபோது, போலீஸாருக்கும், சசிகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜோலாா்பேட்டை தொகுதியில் உள்ள பல்வேறு பகுதி வாக்குச் சாவடி மையங்களைப் பாா்வையிட்டு, ஏலகிரி கிராமம், ஆதிதிராவிடா் காலனியில் உள்ள வாக்குச் சாவடி மையத்துக்கு வந்த அமைச்சா் கே.சி.வீரமணிக்கும், அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகா் சசிகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா், கே.சி.வீரமணியை அவரது கட்சியினா் சமாதானம் செய்து அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com