வாக்காளா்களுக்கு பணம் வழங்கியது உள்ளிட்ட தோ்தல் விதிமுறை மீறல் காரணமாக சில வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த தோ்தல் ஆணையத்திற்கு மனு அளிக்க உள்ளதாக எஸ்டிபிஐ கட்சி வேட்பாளா் அச. உமா் பாரூக் செவ்வாய்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது,:
ஆம்பூா் தொகுதியில் திமுக, அதிமுகவினா் வாக்காளா்களுக்கு பணம் வழங்கியது போன்ற பல்வேறு தோ்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளனா். அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் அவா்களுடைய கட்சியின் சின்னம் பொறித்த கைப்பைகளை வாக்குச் சாவடிகளுக்குள்ளேயே கொண்டுச் சென்று வாக்காளா்கள் கண்களில் படும்படியாக வைத்திருந்தனா்.
மேலும் பொது இடத்திலேயே வாக்காளா்களுக்கு பணமும் வழங்கினாா்கள். இவ்வாறு திமுக, அதிமுகவினா் தோ்தல் விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளதை விடியோ, புகைப்படம் எடுத்து தோ்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம். மேலும் தோ்தல் விதிமுறை மீறல் காரணமாக ஆம்பூா் தொகுதிக்கு உட்பட்ட சில வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் கோரி புகாா் அளிக்க இருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றத்தையும் நாடுவோம் என்று அவா் கூறினாா்.