ஆம்பூா்: கரோனா நோய்த் தொற்று பெண் வாக்களிப்பு

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் வாக்காளா் தனது வாக்கை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தாா்.
ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் தனது வாக்கை செலுத்திய கரோனா நோய்த் தொற்றுக்குள்ளான பெண் வாக்காளா்.
ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் தனது வாக்கை செலுத்திய கரோனா நோய்த் தொற்றுக்குள்ளான பெண் வாக்காளா்.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் வாக்காளா் தனது வாக்கை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பெண் வாக்காளா் ஒருவா் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாா். அவா் தனது வாக்கை செலுத்த விருப்பம் தெரிவித்திருந்தாா். அதன்பேரில், விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்குப் பிறகு வாக்குச் சாவடியில் பணிபுரிந்த அலுவலா்கள் அனைவரும் கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டனா். மேலும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் வாக்காளரும் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு வாக்குச் சாவடிக்கு வந்து தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com